தமிழ்நாடு செய்திகள்

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கலைஞர்.கும்பகோணத்தில் தமிழக அரசு சார்பில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்.

மாலை மலர்

கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என வலியுறுத்தினர்.

* மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கலைஞர்.

* தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கலைஞர்.

* பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

* கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.

* கும்பகோணத்தில் தமிழக அரசு சார்பில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.