தமிழக செய்திகள்

GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

இந்த வெற்றிக்காக 50,000 அமெரிக்க டாலர்கள் பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

செஸ் தலைநகரமான செயின்ட் லூயிஸில் நடைபெற்ற 2026 கிராண்ட் செஸ் டூர் செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்.,

“அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையான ஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.