தமிழ்வேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது "வி.பி. சிங்கை சமூக நீதி காவலர் என்று அழைப்பதை போல, நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாநில உரிமை காவலர் என்று அழைக்கலாம்.
மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராடி பல வெற்றிகளை குவித்து, நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்" என்றார்.