நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற பிரிவில் மத்திய அரசு சார்பில் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியானாவில் குருகிராம் பகுதியில் நடைபெற்றது.
மத்திய அரசியின் இந்த உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது.
இந்த விருதினை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.
இதேபோல், சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரெயில், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரெயில் பிரிவுகளில் மத்திய அரசின் இரண்டு விருதுகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பெற்றுள்ளது.