தமிழக செய்திகள்

12 நாளில் 10 ரூபாய்க்கும் அதிகம்: CNG விலை உயர்வால் திணறும் வாகன ஓட்டிகள்

கடந்த 12 நாட்​களில் சிஎன்ஜி விலை உயர்த்​தப்​படு​வது இது 5-வது முறை ஆகும்.

ஆட்​டோ, கார்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் சிஎன்ஜி எரி​வாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்​தப்​பட்டளது. கடந்த 11 நாட்​களில் இதன் விலை 4-வது முறை​யாக உயர்ந்துள்​ள​தால் பொது​மக்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் இந்​திய எண்​ணெய் நிறுவனங்​களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு​செய்ய கடந்த 15-ம் தேதி பெட்​ரோல், டீசல் விலை லிட்​டருக்கு ரூ.3 உயர்த்​தப்​பட்​டது. அதன் பிறகு பெட்​ரோல், டீசல் விலை 4 முறை உயர்த்​தப்​பட்​டது.

இதே​போல் ஆட்டோ மற்​றும் கார்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் சிஎன்ஜி எரி​வாயு விலை கடந்த 15-ம் தேதி டெல்லியில் கிலோவுக்கு ரூ.2 உயர்த்​தப்​பட்​டது.

தொடர்ந்து 22ம் தேதி 1 ரூபா​யும், 24-ம் தேதி 1 ரூபா​யும் உயர்த்​தப்​பட்​டது. சிஎன்ஜி எரி​வாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், இன்று காலை சி என் ஜி விலை 3.50 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தப் புதிய விலை மாற்​றத்​தின்​படி, சென்னையில் தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.95.00 ஆக உள்​ளது.

கடந்த 12 நாட்​களில் சிஎன்ஜி விலை உயர்த்​தப்​படு​வது இது 5-வது முறை​யாகும். இதன்மூலம் 12 நாட்​களில் மொத்​தம் ரூ.10க்கும் அதிகமாக விலை உயர்ந்​துள்​ளது.

பெட்​ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி எரி​வாயு விலையும் தொடர்ந்து உயர்ந்து வரு​வது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்​துள்​ளது.