தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு

வழக்கறிஞர் விஜயகுமாரை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவின்போது தவெக வேட்பாளர் அசோக் சினோரா, வழக்கறிஞர் விஜயகுமாரை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரையடுத்து முன்னாள் அமைச்சரும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.