தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வின் சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக எல்.முருகன், அண்ணாமலை நியமனம்

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள 234 தொகுதிகளும் 72 நிர்வாகிகளுக்கு பங்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. பிரசார பணிகளை வியூகம் அமைத்து முன் னெடுத்து உள்ளன.

கட்சியின் முக்கிய தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரங்களை மேற்கொள்ள ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்தலை சந்திக்க ஒவ்வொரு தொகுதியையும் தயார் செய்யும் வகையில் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் தொடர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அதில் 2 முதல் 7 சட்டசபை தொகுதிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மத்திய மந்திரி எல்.முருகன் திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர், நாங்குனேரி, பொள்ளாச்சி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை-சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பத்தூர் சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜாவும் எழும்பூர், ராசிபுரம், பர மத்திவேலூர் தொகுதிகளுக்கு வி.பி.துரைசாமியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளும் 72 நிர்வாகிகளுக்கு பங்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தமிழ்நாட்டு வளர்ச்சியில் அனைவரும் பங்கெடுப்போம். மக்களிடம் இருந்து மக்களுக்காகஎன்ற கோஷத்தோடு மக்களிடம் நேரடியாக கருத்து கேட்கும் பிரசார பயணத்தை இன்று தொடங்குகிறது.

இதன் தொடக்க விழா இன்று அமைந்தகரை அய்யாவு மகாலில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் இந்த கருத்து கேட்பு வாகனத்தை தொடங்கி வைக்கிறார். மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த வாகனம் தமிழ்நாடு முழுவதும் செல்லும். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன தேவைகள்? மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை கேட்டறிந்து அதன் அடிப்படையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.

புதுவையிலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க. சார்பில் மக்களி டம் கருத்துக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படிவத்தை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா புதுவை கடற்கரை காந்தி திடல் அருகே இன்று மாலை வெளியிடுகிறார்.

உங்களின் விருப்பம், எங்களின் வாக்குறுதி எனும் தலைப்பில் இந்த படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் கருத்து தெரிவிப்பவரின் பெயர், தொகுதி, தொலைபேசி எண் உட்பட விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தப் படிவத்தில் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படை யில்தான் தேர்தல் வாக்குறுதி அமையும் என கூறப்படுகிறது.