தமிழ்நாடு செய்திகள்

குப்பை தொட்டியில் அழுகிய நிலையில் குழந்தை உடல் மீட்பு - போலீசார் விசாரணை

பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குழந்தை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை கொளத்தூர் ராஜமங்கலத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நைட்டி உடையில் குழந்தையின் உடலை சுற்றி குப்பையில் வீசிச் சென்றுள்ளனர். குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் குழந்தையின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.