தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக வி.கே. சசிகலாவின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து சசிகலாவின் காளையை வளர்த்து வரும் மலையாண்டிக்கு ரூ.10 லட்சம் மதிப்பு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக இரண்டாம் இடம் பிடித்த காளை உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.