தமிழக செய்திகள்

பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை குண்டுக்கட்டாக காவல் துறை கைது செய்தது.

கோவை அவிநாசி சாலையில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக போலீசுக்கு தெரியவந்ததை அடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை குண்டுக்கட்டாக காவல் துறை கைது செய்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.