சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
யாராகினும் கல்வியால் எந்நிலையும் மாற்றி, உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை நிரூபித்து காட்டிய கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவு நாயகன், விஞ்ஞானத்தில் நாட்டின் புகழை விண்ணைத்தொட செய்த அறிவியல் ஆராய்ச்சியாளர், என்றும் மாணவர்களுக்கு ஆகச் சிறந்த வழிகாட்டியாக திகழும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரின் பெரும்புகழையும், சாதனைகளையும் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.