தமிழக செய்திகள்

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருட்கள் தடுப்பு படை

சென்னையில் 12 உட்பட மாநிலம் முழுவதும் 65 இடங்களில் போதைப்பொருள் தடுப்புப்படை காவல்நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

தமிழகத்தில் போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருட்கள் தடுப்பு படை உருவாக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் 12 உட்பட மாநிலம் முழுவதும் 65 இடங்களில் போதைப்பொருள் தடுப்புப்படை காவல்நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

முதலமைச்சர் பதவியேற்ற பின் விஜய் கையெழுத்திட்ட 3 கோப்புகளில் போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் ஒன்று.