தமிழ்க நிதி நிலை அறிக்கையை அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்தார் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 3,734 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மரிய வில்சன்

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்த தமிழக முதலமைச்சர் விஜய், தான் வழக்கமாக அணிந்து வரும் கோட் ஷூட்-டிற்கு பதிலாக எளிமையான உடையில் வந்தார்.

இந்த நிதி நிலை அறிக்கையை 10 மணிக்கு தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு தமிழக முதலமைச்சர் வந்துள்ளார் என கூறினார்.

மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.

இதையடுத்து அவர் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், “தமிழகத்தில் 3,734 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.

இந்த நிதியாண்டில்” என்று கூறினார்.