சென்னை விமான நிலையத்தில் இருந்து 172 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானத்தை உடனடியாக விமானி நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்லும்போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார்.
விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை விமானி உணர்ந்ததை தொடர்ந்து, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து அவசரமாக நிறுத்தினார்.
இதையடுத்து, விமானத்தை மீண்டும் நடைமேடைக்கு இழுவை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
மேலும், விமானத்தில் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 5 மணிக்கு புறப்புடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.