பக்ரீத் திருநாளை கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தியாகம், கருணை. சமத்துவம். மனிதநேயம் ஆகியவற்றை மனித குலத்திற்குப் போதிக்கும் ஈகைப் பெருநாளான பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
இப்பெருநாளில் உலகம் எங்கும் அன்பு, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் தழைத்தோங்கிட அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.