தமிழக செய்திகள்

62 மையங்கள்.. காலை 8 மணிக்கு எண்ணிக்கை துவக்கம் - முதலில் தபால் வாக்குகள் - தமிழக தேர்தல் ஆணையர் அறிக்கை

30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

அசாம், புதுச்சேரிக்கு ஏப்ரல் 8 ஆம் தேதியும், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மற்றவற்றுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்திற்கு மட்டும் ஏப்ரல் 29 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து மே 4 அன்று ஒட்டுமொத்தமாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தமிழக தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில்நடைபெறவுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8:00 மணிக்குத் துவங்கும். முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யபப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்களை தவிர்த்து மேலும் 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க எதுவாக தபால் வாக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.