செங்கல்பட்டு மறைமலை நகரில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்வில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆள் மாற்றம், அரசியல் மாற்றத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அல்ல நாம். முன்னோர்கள் அறம் சார்ந்த ஆட்சி செய்தனர்.
உயிரை இழக்கலாம் உரிமையை இழக்கலாமா? ஒற்றை மகன் என எண்ண வேண்டாம். லட்சக்கணக்கானவர்கள் என்னுடன் உள்ளனர். எங்களுக்கு வயிற்றுப்பசி இல்லை, வரலாற்றுப்பசி உண்டு; சோற்றுப்பசி அல்ல, வஞ்சகத்தின் பசி உள்ளது.
நல்ல வேளை என்னைத் தோற்கடித்து சட்டமன்றத்திற்குள் நுழையவிடாமல் செய்தீர்கள். நல்வாய்ப்பாக தப்பித்துவிட்டீர்கள். ஐந்தாரு பேரோடு சட்டமன்றத்திற்குள் நுழைந்திருந்தேன் என்றால் எல்லோரும் வெளியில்தான் நின்றிருப்பீர்கள்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.