தமிழ்நாடு செய்திகள்

சென்னை பொத்தேரியில் போதை பொருட்கள்- மாணவர்கள் 21 பேர் கைது

அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை பொத்தேரியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கல்லூர் மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து, 60 இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.