தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் ஒரே காவலர் குடியிருப்பில் 2 போலீசார் தற்கொலை

தற்கொலை செய்த ஜான் ஆல்பர்டிற்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன்.தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை.

மாலை மலர்

சென்னை பட்டினம்பாக்கம் ரோகினி கார்டனில் காவலர் குடியிருப்பில் கடந்த 3 நாட்களில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உதவி ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2 மணியளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தற்கொலை செய்த ஜான் ஆல்பர்டிற்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே குடியிருப்பில், நேற்று முன்தினம் போக்குவரத்து காவலர் முகமது ஜாவித் அலி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.