கேரளாவின் சித்தூர் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் இருவர், திடீரென நீர் சுழற்சியில் சிக்கி உயிரிழந்தனர்.
கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் அருண்குமார், ஸ்ரீ கவுதமன் இருவரும், நண்பர்களுடன் கேரளா சென்றிருந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
இருவரும் நீரில் மூழ்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.