கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் உள்ளே சிக்கி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.