ஆத்தூர்:
ஆத்தூர் அருகே மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் சுபாஷ் (வயது 27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுபாஷ் சோகத்தில் இருந்தார்.
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுபாஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு இறந்தார்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.