கூடலூர்:
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி மரப்பாலம், பாரம் அண்ணாநகர், பாலவாடி, சூண்டி, முல்லை நகர் ஆகிய பகுதிகளில் காட்டுயானை நடமாட்டம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து சென்று, காட்டுயானையை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து காட்டுயானை பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிகுந்த கவனமுடன் வெளியே வர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.