கைது 
செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பேரையூர்:

வில்லூர் போலீசார் ரோந்து சென்றபோது எம். புளியங்குளத்தை சேர்ந்த பாண்டி (வயது 38) என்பவர் தனது பெட்டிக் கடையில் விற்பனை செய்வதற்காக 24 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்த போது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேபோல் சித்தூரை சேர்ந்த மாரியம்மாள் (60), பெரியவண்டாரியை சேர்ந்த செல்வம் (48) ஆகியோரும் புகையிலை விற்றதாக கைது செய்யப்பட்டனர்.