அச்சுதானந்தன் 
செய்திகள்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐசியுவில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன், கேரள மாநில முதல் மந்திரியாக 2006 முதல் 2011 வரை பதவி வகித்தார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அச்சுதானந்தன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அச்சுதானந்தனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அச்சுதானந்தனுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்...இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் - கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி