வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளியில் பொதுமக்கள் முககவசம் அணிந்து பொது இடங்களுக்கு வருகிறார்களா? என அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதில் சிலர் அபராதம் செலுத்த மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வெளியே வர வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.