சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடக்க இருந்த வெற்றிவேல் யாத்திரையானது புயலின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கும் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.