வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பன் (44). இவர்கள் இருவரும் வ.புதுப்பட்டியிலிருந்து கோபாலபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கருப்பனும், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பரலோகம் என்பவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.