வடகாடு:
வடகாடு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று வடகாடு போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக சந்திரசேகரன் (வயது 38) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.