தற்கொலை 
செய்திகள்

ஊத்தங்கரை அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை

ஊத்தங்கரை அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள வெப்பாலம்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 48) விவசாயி. இவருடைய மனைவி தமிழரசி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த காளியப்பன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காளியப்பன் நேற்று முன்தினம் வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை, தமிழரசி மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காளியப்பன் இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நேரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.