டி.டி.வி.தினகரன் 
செய்திகள்

டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் அஞ்சலி

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து பேரணியாக சென்று, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்சித் தலைவி அம்மாவை போற்றி வணங்கும் வகையில், அவரது நினைவு நாளான வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து பேரணியாக சென்று, மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.