மரணம் 
செய்திகள்

ரெயில் மோதி தொழிலாளி பலி

ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் மேல் பக்கம் தெற்கு தெருவில் வசித்து வந்தவர் மாரியப்பன் (வயது 60). கூலித் தொழிலாளியான இவர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று மாரியப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.