பேரையூர்:
சாப்டூர் போலீசார் கட்டாரப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அத்திப்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 75) என்பவர் தனது பெட்டிக் கடையில் விற்பனை செய்வதற்காக 35 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சேகரை கைது செய்தனர்.