கைது 
செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பேரையூர்:

பேரையூர் போலீசார் ரோந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட 100 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தாராம். போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் அரசபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (56) என்பவரும், தங்களாசேரியை சேர்ந்த ராமராஜ் (37) என்பவரும் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டனர்.