தெற்கு ஆசியாவில் உள்ள மிகப் பெரிய சிறை திகார் சிறை. 3 கி.மீ.-க்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 10 ஆயிரத்து 26 கைதிகளை கையாளலாம். ஆனால் தற்போதைய நிலவரப்படி 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 11- ந் தேதி நிலவரப்படி இங்கு 369 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் முன்னாள் எம்.பி. உள்பட 6 பேர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.