கோப்புபடம் 
செய்திகள்

தாயில்பட்டி கஞ்சா வைத்திருந்தவர் கைது

தாயில்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தாயில்பட்டி:

ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்து பணிக்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள விளக்கு பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டு இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அன்பின் நகரத்தை சேர்ந்த ஜீவானந்தம் (வயது50) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.