விபத்து 
செய்திகள்

தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து- 6 பேர் பலி

தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மணப்பெண் உள்பட 6 பேர் பலியாகினர்.

மாலை மலர்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் மர்ரிமிட்டா பகுதியில் ஆட்டோ மீது லாரி ஒன்று மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். இதில் மணப்பெண் பிரமிளா என்பவரும் அடங்குவார். அவரது திருமணத்துக்கு 10 நாட்களே உள்ள நிலையில் துணி வாங்குவதற்கு தனது தாய், சகோதரர், சகோதரி ஆகியோர் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பிரமிளாவின் தாய், சகோதரர், சகோதரியும் பலியானார்கள்.