விபத்து 
செய்திகள்

தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து- 6 பேர் பலி

தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மணப்பெண் உள்பட 6 பேர் பலியாகினர்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் மர்ரிமிட்டா பகுதியில் ஆட்டோ மீது லாரி ஒன்று மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். இதில் மணப்பெண் பிரமிளா என்பவரும் அடங்குவார். அவரது திருமணத்துக்கு 10 நாட்களே உள்ள நிலையில் துணி வாங்குவதற்கு தனது தாய், சகோதரர், சகோதரி ஆகியோர் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பிரமிளாவின் தாய், சகோதரர், சகோதரியும் பலியானார்கள்.

SCROLL FOR NEXT