ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் மர்ரிமிட்டா பகுதியில் ஆட்டோ மீது லாரி ஒன்று மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். இதில் மணப்பெண் பிரமிளா என்பவரும் அடங்குவார். அவரது திருமணத்துக்கு 10 நாட்களே உள்ள நிலையில் துணி வாங்குவதற்கு தனது தாய், சகோதரர், சகோதரி ஆகியோர் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பிரமிளாவின் தாய், சகோதரர், சகோதரியும் பலியானார்கள்.