கைது 
செய்திகள்

சூளகிரி அருகே விவசாயியை தாக்கிய 2 பேர் கைது

சூளகிரி அருகே விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி:

சூளகிரி அருகேயுள்ள எலசப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 44). விவசாயி. இவரை நிலப்பிரச்சினை தொடர்பாக வரதராஜ், வெங்கடேஷ் ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜ், வெங்கடேசை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT