கடத்தல் 
செய்திகள்

வில்லியனூரில் பள்ளி மாணவி கடத்தல்

வில்லியனூரில் பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வில்லியனூர்:

வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரூபிசகாய சாந்தகுமாரி (55). மாற்றுத்திறனாளியான இவர், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது 15 வயது மகள், 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் திடீரென மாணவி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து ரூபிசகாயசாந்தகுமாரி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.