வெடி விபத்து 
செய்திகள்

சாத்தூர் அருகே வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே வெடிவிபத்தால் 3 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது  ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வெடிவிபத்தில் சிக்கி மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதேபோல் வெடிவிபத்தால் அருகே இருந்த 3 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.