ரோம்:
இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்கா ஆகியோர் விளையாடினர்.
இதில், அதிரடியாக விளையாடிய ரபேல் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலி ஓப்பன் இறுதிப்போட்டிக்கு 12வது முறையாக முன்னேறியுள்ளார்.