கைது 
செய்திகள்

போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போச்சம்பள்ளி போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்ற சூளகரை நைனாதுரை (வயது 49) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது. ஊத்தங்கரை போலீசார் முனியப்பன் கோவில் அருகில் ரோந்து சென்றபோது, லாட்டரி சீட்டு விற்ற ஊத்தங்கரை நாராயணன் நகர் ஜீவா (36) என்பவரை கைது செய்தனர்.