பிரதமர் மோடி 
செய்திகள்

முதல் கட்ட தேர்தல் வாக்களிப்பில் சாதனை படையுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்

தகுதியுள்ள அனைவரும் வந்து ஓட்டளிப்பில் சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளத்திலும், அசாமிலும் முதல்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரும் வந்து ஓட்டளிப்பில் சாதனை படைக்க வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.