புதுடெல்லி:
மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்காளத்திலும், அசாமிலும் முதல்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரும் வந்து ஓட்டளிப்பில் சாதனை படைக்க வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.