குஜராத்தில் ‘டவ்தே’ புயல் கரையை கடந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும் புயலுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானியிடம் பிரதமர் நரேந்திரமோடி சேத விவரங்களை கேட்டறிந்தார்.