கைது 
செய்திகள்

பெரியகுளம் அருகே மண் அள்ளிய லாரி டிரைவர் கைது

பெரியகுளம் அருகே மண் அள்ளிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமநிர்வாக அதிகாரி சோணை, வடுகப்பட்டி சாலையில் ரோந்து சென்றார். அப்போது அங்கு டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் தென்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வடபுதுப்பட்டியை சேர்ந்த குணசேகரனை(வயது 35) கைது செய்தனர்.

SCROLL FOR NEXT