தற்கொலை 
செய்திகள்

பேரையூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

பேரையூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பேரையூர்:

பேரையூர் தாலுகா அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65). தனியாக வசித்து வந்த இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.