கைது 
செய்திகள்

பேரையூர் அருகே கள் வைத்திருந்தவர் கைது

பேரையூர் அருகே கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பேரையூர்:

பேரையூர் போலீசார் மேலப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த பெருமாள் (வயது 50) என்பவர் அங்கு உள்ள பனந்தோப்பில் விற்பனை செய்வதற்காக கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கள்ளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.