சென்னை:
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் (87) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழ.நெடுமாறன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.