பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். திலீப் குமார் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர் ஆவார். இதனால் அவர் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார்.
அதுமட்டுமின்றி இந்திய- பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாக அவர் திகழ்ந்தார்.
இந்த நிலையில் திலீப் குமார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.