நச்சலூர்:
நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குறிச்சி வாரி கரை பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சூரியனூர் பாறைப்பட்டியை சேர்ந்த கனகராஜ் (வயது 48). என்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.